கோவையில் சிறுநீர் கழித்ததைக் கண்டித்த வாலிபரைக் கத்தியைக் காட்டி மிரட்டல் - சிறுவன் கைது

published 1 year ago

கோவையில் சிறுநீர் கழித்ததைக் கண்டித்த வாலிபரைக் கத்தியைக் காட்டி மிரட்டல்  - சிறுவன் கைது

கோவை  :கோவை உப்பாரா வீதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (35). இவர் மணியக்காரன் பாளையம் பகுதியில் இ சேவை மையம் வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது வீட்டின் அருகே வந்த சிறுவன் ஒருவன் சிறுநீர் கழித்தார். இதனைப்பார்த்த கிருஷ்ணகுமார் சிறுவனைத் தட்டி கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் தகாத வார்த்தைகளால் பேசி கத்தியைக் கழுத்தில் வைத்து மிரட்டினார். பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இது குறித்து கிருஷ்ணகுமார் வெரைட்டிஹால் ரோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுவனைக் கைது செய்தனர். பின்னர் அவரை ரோட்டில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe