கோவையில் டூ-வீலருக்கு பெட்ரோல் போடுவதில் தகராறு - பங்க் பெண் ஊழியர் தாக்குதல்

published 1 year ago

கோவையில் டூ-வீலருக்கு பெட்ரோல் போடுவதில் தகராறு - பங்க் பெண் ஊழியர் தாக்குதல்

கோவை : கோவை வின்சென்ட் ரோடு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் சலீம்(33). கறிக்கடை ஊழியர். இவர் நேற்று முன்தினம் உக்கடம் பிபி தெருவில் உள்ள பெட்ரோல் பங்க்கிற்கு டூ-வீலரில் சென்றார். அப்போது அவருக்கு முன்னதாக கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. உடனே சலீம் முதலில் தனது டூ-வீலருக்கு பெட்ரோல் அடிக்குமாறு அங்கு பணியில் இருந்த பெண் ஊழியர் நளினி(45) என்பவரிடம் கூறினார். 

அதற்கு நளினி காருக்கு நிரப்பி விட்டு பிறகு டூ-வீலருக்கு பெட்ரோல் அடிக்கிறேன் என தெரிவித்துள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த சலீம் பெட்ரோல் பங்க் பெண் ஊழியர் நளினியை சரமாரியாக தாக்கினார். இதில் அவருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது.

 அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆட்டோவில் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து உக்கடம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சலீமை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe