கோவையில் இருந்துட்டு பண்டிகைக்கு ஊருக்கு போலாமா? வேணாமான்னு யோசிக்கிறீங்களா? இதோ உங்களுக்கான சிறப்பு அறிவிப்பு!

published 1 year ago

கோவையில் இருந்துட்டு பண்டிகைக்கு ஊருக்கு போலாமா? வேணாமான்னு யோசிக்கிறீங்களா? இதோ உங்களுக்கான சிறப்பு அறிவிப்பு!

கோவை : கோவையில் இருந்துகொண்டு பண்டிகையில் ஊருக்குப் போக, பேருந்து கூட்டமா இருக்குமே என  இனி நினைக்க வேண்டாம். அதற்காகத் தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் அறிவித்த அறிவிப்பில் கோவை மக்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் வகையில் சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்துள்ளது.

பண்டிகை, வார இறுதி நாட்களில் வெளியூர் பயணம் செல்ல கூட்டம் அலைமோதுகிறது. இந்த கூட்ட நெரிசலைத் தவிர்க்கத் தமிழகத்தில் சிறப்புப் பேருந்துகள் இயங்கி வருவது வழக்கம்.

கோவை மட்டுமில்லாமல் தமிழ்நாட்டில் பயணிகளின் வசதிக்காகப் போக்குவரத்துக் கழகம் பல்வேறு முன்னேற்பாடுகளைச் செய்து வருகிறது.

இந்த மாதத்தில் கூட சுதந்திர தினத்துக்காகப் பயணிகளின் வசதியைக் கணக்கில் கொண்டு  சிறப்புப்  பேருந்துகள் இயக்கப்பட்டன.

கோவையில் ஓணம் பண்டிகைக் கலைக்கட்டும். இதற்கான முன்னேற்பாடாகத் தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் கூடுதல் பேருந்துகள் இயக்க அறிவித்துள்ளது.

இதுபோன்ற பண்டிகை நாளான ஓணம் , வார இறுதி நாட்கள், சுப முகூர்த்த தினத்தை முன்னிட்டு வருகிற  27, 29ம் தேதிகளில் கோவை மற்றும் சுற்றுப்புற ஊர்களிலிருந்து கேரளா, மதுரை, தேனி, திருச்சி, சேலம், உதகை போன்ற ஊர்களுக்குச் செல்லவும் மற்றும் சென்று மீண்டும் ஊர் திரும்பவும் ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் வழித்தடப் பேருந்துகளுடன் கூடுதலாக 70 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe