கோவையில் பைக்கை திருடுவிட்டு ஜாலியாக உலா : நண்பர்களுடன் சேர்ந்து மடக்கி பிடித்த வாலிபர்

published 1 year ago

கோவையில் பைக்கை திருடுவிட்டு ஜாலியாக உலா : நண்பர்களுடன் சேர்ந்து மடக்கி பிடித்த வாலிபர்

கோவை: கோவையில் பைக்கை திருடுவிட்டு உக்கடம் பாலத்தில் ஜாலியாக உலா சென்று கொண்டிருந்த நபரை பைக் உரிமையாளர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.

கோவை பீளமேடு காந்திமாநகரை சேர்ந்தவர் சதீஷ்குமார்(21). ஆம்புலன்ஸ் டிரைவர். இவர் நேற்று முன்தினம் தனது பைக்கை அரசு மருத்துவமனை வளாகத்தில் நிறுத்தியிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் நைசாக பைக்கை திருடி சென்றுவிட்டார்.

இதனால் அதிர்ச்சியடைந்த சதீஷ்குமார் தனது நண்பர்கள் சிலருடன் அந்த நபரை தேடினார். அப்போது சுங்கம் திருச்சி ரோடு மேம்பாலத்தில் திருட்டு பைக்கில் சென்ற வாலிபரை மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், பைக் திருட்டில் ஈடுபட்டது மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சுந்தர்ராஜன்(33) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe