கோவையில் பஸ் மோதி வாலிபர் பலி

published 1 year ago

கோவையில் பஸ் மோதி வாலிபர் பலி

திருநெல்வேலி மாவட்டம் களக்காடு காந்திஜி தெருவைச் சேர்ந்தவர் ஷேக் அப்துல்லா(30). கார் டிரைவர். இவர் நேற்று பைக்கில் பொள்ளாச்சி ரோடு குறிச்சி பொங்காளியம்மன் கோயில் அருகே சென்று கொண்டிருந்தார். 

அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக பேருந்தை மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஷேக் அப்துல்லா தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியானார். தகவல் அறிந்து வந்த போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி கோவை இஎஸ்ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த விபத்து தொடர்பாகக் கோவை மேற்கு போக்குவரத்து பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து பேருந்து டிரைவர் ஈரோடு மாவட்டம் பவானி சாகரைச் சேர்ந்த மாதேஷ் குமார்(33) என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe