கோவையில் சிந்தி சமூக மக்கள் ஊர்வலம்

published 1 year ago

கோவையில் சிந்தி சமூக மக்கள் ஊர்வலம்

கோவை: கோவை ஆர் எஸ் புரம் பகுதியில் சிந்தி சமூக மக்களின் குல தெய்வமான ஜெய் சுலைலால் சுவாமி வழிபாட்டின் ஊர்வல நிகழ்ச்சி நடைபெற்றது,

கோவையில் சிந்தி சமூகத்தை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இச்சமூக மக்களின் குலதெய்வம் ஜெய் சுலைலால். இந்த சுவாமிக்கு ஆண்டு தோறும் சிந்தி மக்கள் 40 நாட்கள் விரதமிருந்து பஜனைகள் செய்து 40ம் நாள் இறுதியில் சுவாமியை ஊர்வலமாக அழைத்து செல்வர்.

அந்த வகையில் சிந்தி சிகார் புர் பேங்கர்ஸ் அசோசியேசன் சார்பாக ஜெய் சுலைலால்  ஊர்வல நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தொடர்ந்து 5வது ஆண்டாக நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் சிந்தி மக்கள் கடந்த 40 நாட்களாக வழிபாடு செய்து வந்த ஜெய் சுலை லால் சுமாமியை, ஒருவர் பின் ஒருவராக தலையில் சுமந்தபடி  அலங்கரித்து வைக்கபட்டிருந்த வாகனத்தில் கொண்டு வந்தனர்.

பின்னர் வாகனத்தில், இச்சமூக மக்களின் பாரம்பரிய பக்தி இசையுடன் ஊர்வல நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த வாகனத்தை சங்கத்தின் தலைவர் கிரண்பஞ்சாபி, மற்றும் ப்ரித்தி பஞ்சாபி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இந்த சுவாமி ஊர்வலமானது  ஆர்.எஸ்.புரம் பிரதான சாலை வழியாக சென்று திவான் பகதூர் சாலை, லோகமான்யா வீதி, உள்ளிட்ட பகுதி வழியாக ஊர்வலமாக வந்து மீண்டும் திருக்கோவிலை சென்றடைந்தது.  இதில் 400க்கும்  மேற்பட்ட சிந்தி சமூக மக்கள் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe