கோவையில் தனியார் நிறுவன குடோனில் ரூ.18 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு

published 1 year ago

கோவையில் தனியார் நிறுவன குடோனில் ரூ.18 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு

கோவை : கோவையில் தனியார் நிறுவன குடோனில் ரூ.18 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கோவை அடுத்த கோவைப்புதூரில் தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான குடோன் உள்ளது. இங்கு ஜெனரேட்டர், வால்வ் உள்ளிட்ட இயந்திர உதிரிபாகங்கள் அதிகளவில் குவித்து வைக்கப்பட்டிருந்தன. 

இந்நிலையில், சம்பவத்தன்று குடோனில் இருந்த பொருட்களின் இருப்பை நிறுவன அதிகாரிகள் சரிபார்த்தனர். அப்போது அங்கிருந்த ரூ.18.12 லட்சம் மதிப்பிலான 2 ஜெனரேட்டர், 125 வால்வ், கேபிள் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து நிறுவனத்தினர் குனியமுத்தூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து தனியார் நிறுவன குடோனில் பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe