கோவை ஆட்சியர் அலுவலகத்திற்குள் வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

published 1 year ago

கோவை ஆட்சியர் அலுவலகத்திற்குள் வருவாய்த்துறை அலுவலர்கள் காத்திருப்பு போராட்டம்

கோவை: கள்ளக்குறிச்சி தாசில்தார் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட விவகாரத்தை தொடர்ந்து கோவை மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் ஆட்சியர் அலுவலகத்திற்குள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் காலனி பகுதியில் அரசு புறம்போக்கு நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டப்பட்டு இருந்த வீடுகளை நீதிமன்ற உத்தரவின்படி கடந்த 9ம் தேதி கள்ளக்குறிச்சி ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் மனோஜ் முனியன் தலைமையிலான வருவாய் அதிகாரிகள் அகற்றினர். அப்போது அங்கு பட்டா இடத்தில் கட்டப்பட்டிருந்த வீடுகளின் முன்புற சுவர் பகுதியும் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து வருவாய் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடிய அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து தனித் தாசில்தார் மனோஜ் முனியன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு அரசியல் அழுத்தமும் காரணம் என கூறி பல்வேறு மாவட்டங்களில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட அலுவலர்கள் பங்கேற்றுள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe