பொது இடத்தில் குப்பை கொட்டியவர்களுக்கு ரூ.4 லட்சம் அபராதம்.. கோவை மாநகராட்சி எச்சரிக்கை..

published 1 year ago

பொது இடத்தில் குப்பை கொட்டியவர்களுக்கு ரூ.4 லட்சம் அபராதம்.. கோவை மாநகராட்சி எச்சரிக்கை..

கோவை: பொது இடத்தில் குப்பை கொட்டிய கட்டுமான நிறுவனத்திற்கு ரூ.4 லட்சம் அபராதம் விதித்து வசூலித்துள்ளது கோவை மாநகராட்சி.

இதுகுறித்து கோவை மாநகராட்சி  நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள், சாலைகள், தெருக்களில் குப்பைகளை கொட்டுவது தொடர்பாக மாநகராட்சி பணியாளர்களால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த 30ம் தேதி கிழக்கு மண்டலம், வார்டு எண்.50க்குட்பட்ட ஹிந்துஸ்தான் கல்லூரி பின்பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் நிறுவனத்தில் 200 மேற்பட்டோர் தங்கியுள்ளனர்.

அவர்களிடமிருந்து உருவாகும் குப்பைகளை மீனா எஸ்டேட் மற்றும் மற்றும் ஹிந்துஸ்தான் அவென்யூ பகுதிகளில் கொட்டியது கண்டறியப்பட்டு மாநகராட்சி ஆணையர் பிரதாப் உத்தரவின்படி, சுகாதார ஆய்வாளர் ஜீவமுருகராஜ் மூலம் சம்மந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்திற்கு ரூ.4 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டு, வங்கி வரைவோலையாக இன்று பெறப்பட்டுள்ளது.

எனவே. பொதுமக்கள், வணிக நிறுவனத்தினர் கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகள், சாலைகள், தெருக்களில் குப்பைகளை கொட்டுவதை தவிர்த்து, அதற்கென தனியே வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் போடுமாறும், இதனை மீறி செயல்படுவோர் மீது மாநகராட்சி அதிகாரிகளால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் பிரதாப் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe