கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோவை இஸ்கான் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு

published 1 year ago

கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு கோவை இஸ்கான் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு

கோவை : கிருஷ்ண ஜெயந்தி தினத்தை முன்னிட்டு கோவை இஸ்கான் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. கோவில்களில் சிறப்புப் பிரார்த்தனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. 

குழந்தைகள் உள்ள வீடுகளில் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமணிந்து அவர்களின் கால்களை அரிசி மாவில் நனைத்து வீடுகளுக்குள் அழைத்து வரும்  நிகழ்வும் நடைபெற்று வருகிறது.

கிருஷ்ண ஜெயந்தியின் ஒரு பகுதியாகக் கோவை கொடிசியா பகுதியில் அமைந்துள்ள இஸ்கான் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இங்குப் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஜெக நாதர், பலதேவர், சுபத்ரா தேவியருக்குத் திருமஞ்சன அபிஷேகம் நடைபெற்றது. மேலும், பக்தர்கள் கிருஷ்ணன் புகழ் பாடும் "ஹேர கிருஷ்ணா" என்ற சங்கீர்த்தனம் பாடினர்.

தொடர்ந்து கிருஷ்ணரின் புகழைப் போற்றும் விதமாகச் சிறப்புப் பஜனை செய்யப்பட்டது. இதில் கோவை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe