கோவையில் இருந்து மதுரை, சேலம், திருச்சிக்கு 50 கூடுதல் பேருந்துகள்

published 1 year ago

கோவையில் இருந்து மதுரை, சேலம், திருச்சிக்கு 50 கூடுதல் பேருந்துகள்

கோவை: வார விடுமுறை நாட்களை முன்னிட்டு கோவையில் இருந்து மதுரை, சேலம், திருச்சி மற்றும் நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 50 கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக கோவை மண்டலத்தின் மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கோவை மண்டலத்தின் சார்பாக இரண்டாம் சனி மற்றும் வார இறுதி நாட்களான (09.09.2023 மற்றும் 10.09.2023) ஆகிய நாட்களில் கோவை மற்றும் சுற்றுப்புற ஊர்களிலிருந்து மதுரை, தேனி, திருச்சி,

சேலம், உதகை போன்ற ஊர்களுக்கு செல்லவும் மற்றும் மீண்டும் ஊர் திரும்பவும் ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் வழித்தடப் பேருந்துகளுடன் கூடுதலாக 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe