கோவையில் போலீஸ் கமிஷன் ஆலோசனை கூட்டம் : 8 மாவட்ட அதிகாரிகள் பங்கேற்பு

published 1 year ago

கோவையில் போலீஸ் கமிஷன் ஆலோசனை கூட்டம் : 8 மாவட்ட அதிகாரிகள் பங்கேற்பு

கோவை: மேற்குமண்டல காவல்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான போலீஸ் கமிஷன் ஆலோசனை கூட்டம் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மேற்கு மண்டலத்தில் காவல்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்த 5-வது போலீஸ் கமிஷன் ஆலோசனைக் கூட்டம் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

ஓய்வுபெற்ற நீதிபதி செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓய்வு பெற்ற ஆட்சியர் அலாவுதீன் மாற்றும், முன்னாள் டிஜிபி ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர். இந்தக் கூட்டத்தில் காவல்துறையில் பணி நியமனம், ஊதியம், பணிகளுக்கான நெறிமுறை, மன அழுத்தம், மன உளைச்சல் போக்குவது உள்ளிட்ட கருத்துக்கள் பரிமாறப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாவட்ட கலெக்டர்கள் கிராந்தி குமார் பாடி, அருணா, கிறிஸ்து ராஜ், ராஜகோபால் சுன்கரா, உமா, கார்மேகம், சராயு, சாந்தி, கோவை மாநகராட்சி கமிஷனர் மு.பிரதாப், போலீஸ் கமிஷனர்கள் பாலகிருஷ்ணன், பிரவீன் குமார் அபினபு, விஜயகுமாரி, மேற்கு மண்டல ஐஜி பவானிஸ்வரி, டி ஐ ஜி-க்கள் சரவண சுந்தர், ராஜேஸ்வரி, எஸ்பி-க்கள் பத்ரி நாராயணன், பிரபாகர், சாமிநாதன், ஜவகர், அருண் கபிலன், ராஜேஷ் கண்ணன், ஸ்டீபன் ஜேசுபாதம், சரோஜ் குமார் தாகூர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மேலும், கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா, மருத்துவத்துறை அதிகாரிகள், உளவியல் ஆலோசகர்களும் இந்த ஆலோசனைக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe