கோடநாடு கொலை கொள்ளை வழக்கு- ஓட்டுனர் கனகராஜன் சகோதரர் தனபால் சிபிசிஐடி அதிகாரிகள் முன் ஆஜர்...

published 1 year ago

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு- ஓட்டுனர் கனகராஜன் சகோதரர் தனபால் சிபிசிஐடி அதிகாரிகள் முன் ஆஜர்...

கோவை: முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் கோடநாடு பங்களா கொலை கொள்ளை வழக்கு சம்பந்தமாக சிபிசிஐடி அதிகாரிகள் தற்பொழுது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

இதன் விசாரணை தற்பொழுது தீவிரமடைந்துள்ள நிலையில் விபத்தில் உயிரிழந்த ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜன் சகோதரர் தனபால் இன்று கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் அதிகாரிகள் முன் ஆஜராக வருகை புரிந்தார்.

சிபிசிஐடி அதிகாரிகளின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

சில தினங்களுக்கு முன்பு தன்னை சிபிசிஐடி அதிகாரிகள் முன் ஆஜராக விடாமல் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் தடுத்ததாக தனபால் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe