அரசு பள்ளி மாணவர்களை கொண்டு திறந்து வைக்கப்பட்ட உயர்மட்ட நடைபாதை பாலம்...!

published 1 year ago

அரசு பள்ளி மாணவர்களை கொண்டு திறந்து வைக்கப்பட்ட உயர்மட்ட நடைபாதை பாலம்...!

கோவை: குனியமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட நடைபாதை பாலத்தினை மாணவர்களை கொண்டு மாநகராட்சி ஆணையாளர் மற்றும் துணை மேயர் திறந்து வைத்தனர்.

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் 87 வது வார்டுக்கு உட்பட்ட குனியமுத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் 40.60 லட்சம் மதிப்பீட்டில் பாலக்காடு சாலை மற்றும் ரைஸ் மில் சாலை சந்திப்பில் உயர்மட்ட நடைபாதை பாலப் பணிகள், நடைபெற்று வந்த நிலையில் தற்பொழுது முடிவடைந்துள்ளது. 

இதனை விரைந்து மக்கள் பயன்பாட்டிற்காக கொண்டு வரும்படி அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். மேலும் பள்ளி மாணவர்களும் சாலைகளை கடப்பதற்கு இந்த நடைபாதை பாலம் மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதால் விரைந்து திறக்கும்படி கோரிக்கை எழுந்து வந்தது. 

 

இந்நிலையில் அந்த நடைபாதை பாலத்தினை மக்கள் பயன்பாட்டிற்காக கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் மற்றும் துணை மேயர் வெற்றிச்செல்வன் ஆகியோர் அரசு பள்ளி மாணவர்களை கொண்டு திறந்து வைத்தனர். அரசு பள்ளி மாணவர்களை கொண்டு நடைபாதை பாலம் திறந்து வைக்கப்பட்டது அப்பகுதி மக்கள் மத்தியிலும் மாணவர்கள் மத்தியிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் பாபு, உதவி ஆணையாளர் பிரேம் ஆனந்த் உட்பட மாநகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe