கோவையில் வியாபாரியிடம் மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட மூன்று பேர் கைது

published 1 year ago

கோவையில் வியாபாரியிடம் மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட மூன்று பேர் கைது

கோவையில் வெவ்வேறு இடங்களில் வியாபாரி உட்பட 2 பேரை மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோவை ரத்தினபுரி கிழக்கு தில்லை நகரை சேர்ந்தவர் மணிகண்டன் (45). இவர் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வருகிறார். 

இந்நிலையில், நேற்று மணிகண்டன் காந்திபுரம் 9வது வீதியில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் மணிகண்டனை கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.300ஐ பறித்து கொண்டு தப்பினார். 

இதுகுறித்து மணிகண்டன் ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் கத்தி முனையில் பணம் பறித்தது கோல்டுவின்ஸ் பகுதியை சேர்ந்த கால் டாக்சி டிரைவர் கார்த்திக் (24), சரவணம்பட்டி புத்தர் தெருவை சேர்ந்த மார்க்கெட்டிங் ஊழியர் ரவிவர்மன் (19) என்பது தெரியவந்தது. 

 

போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதேபோல், கோவை சரவணம்பட்டி சிதம்பரம் நகரை சேர்ந்தவர் கண்ணன் (41), பேக்கரி கடை வைத்துள்ளார். இவர் நேற்று சத்தி ரோட்டில் உள்ள ஒரு மில் அருகே நின்றிருந்தார். 

அப்போது அங்கு வந்த சிறுவன் ஒருவன் கத்திமுனையில் மிரட்டி கண்ணனிடம் இருந்த ரூ.700ஐ பறித்து கொண்டு தப்பினார். இதுகுறித்து கண்ணன் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிந்து கத்தி முனையில் பணம் பறித்த சரவணம்பட்டி போயர் தெருவை சேர்ந்த 17 வயது சிறுவனை கைது செய்தனர். பின்னர் அவரை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் போலீசார் சேர்த்தனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe