கோவையில் கவுன்சிலரை மிரட்டியவர் கைது…

published 1 year ago

கோவையில் கவுன்சிலரை மிரட்டியவர் கைது…

கோவை: கோவையில் கவுன்சிலரை மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.

கோவை ஒண்டிப்புதூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(61). 56-வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர்.

இவரது பகுதியில் உள்ள போர்வெல் மோட்டாரின் ஸ்விட்ச் பாக்ஸை எலக்ட்ரீசியன் பொன்னுசாமி(61) என்பவர் குடிபோதையில் சேதப்படுத்தியதாகவும், அதனால் ஒருவர் மின்சாரம் தாக்கியதில் காயம் அடைந்ததாகவும் தெரிகிறது.

இதனையறிந்த கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி , பொன்னுசாமியை கண்டித்தார். இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த பொன்னுசாமி தகாத வார்த்தைகளால் பேசி கிருஷ்ணமூர்த்திக்கு மிரட்டல் விடுத்தார்.

இது குறித்து கிருஷ்ணமூர்த்தி சிங்காநல்லூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்கு பதிவு செய்து கவுன்சிலரை மிரட்டிய ஒண்டிப்புதூர் தெப்ப கவுண்டர் வீதியை சேர்ந்த பொன்னுசாமியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe