மாவட்ட காவல்துறை சார்பில் மக்கள் குறைதீர்ப்பு முகாம்…

published 1 year ago

மாவட்ட காவல்துறை சார்பில்  மக்கள் குறைதீர்ப்பு முகாம்…

கோவை: கோவை மாவட்ட காவல்துறை சார்பில்  மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது.

 

பொதுமக்கள் கொடுத்த மனுக்களின் மீது விசாரணை மற்றும் ஏற்கனவே விசாரித்து எடுக்கப்பட்ட நடவடிக்கையில் திருப்தி அடையாத மனுக்களை கண்டறிந்து அம்மனுக்கள் மீதான மறுவிசாரணை இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தலைமையில், மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.

இதில் மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர்களை நேரில் வரவழைத்து அவர்களின் மனு மீதான விசாரணையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல் அதிகாரிகள் மேற்கொண்டனர்.

இன்று நடைபெற்ற இந்த மக்கள் குறை தீர்ப்பு முகாமில் குடும்பப் பிரச்சனை, பணப்பரிமாற்ற பிரச்சனை மற்றும் இடப்பிரச்சினை மனுக்கள் மீது விசாரணை மற்றும் மறுவிசாரணை மேற்கொண்டதில், 1 மனு மீது முதல் தகவல் அறிக்கை(FIR) பதிவு செய்யப்பட்டும், 100 மனுக்கள் மீது சுமூகமான முறையிலும் தீர்வு காணப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe