மாநகராட்சி அலுவலகத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை திறப்பு...

published 1 year ago

மாநகராட்சி அலுவலகத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறை திறப்பு...

கோவை: மாநகராட்சி அலுவலகத்தில் தாய்மார்கள் பாலூட்டும் அறையை மேயர் திறந்து வைத்தார்.

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் பல்வேறு துறை அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். கர்ப்பிணி பெண்கள் தாய்மார்களும் மாநகராட்சி அலுவலகத்திற்கு பல்வேறு பணிகளுக்காக வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் Coimbatore North Ladies Circle 11 சார்பில் 1 லட்சம் மதிப்பீட்டில் தாய்மார்கள் பாலூட்டும் அறை அமைக்கப்பட்டுள்ளது. இதனை இன்று கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்நிகழ்வில் மாநகராட்சி துணை ஆணையாளர் செல்வசுரபி உட்பட Coimbatore North Ladies Circle 11 நிர்வாக தலைவர் ஐஸ்வர்யா திட்ட ஒருங்கிணைப்பாளர் தீபிகா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe