மின் கட்டண உயர்வை குறைக்காத காரணத்தினால் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழில் கூடங்கள் கருப்புக்கொடி ஏற்றி கண்டனம்...

published 1 year ago

மின் கட்டண உயர்வை குறைக்காத காரணத்தினால் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழில் கூடங்கள் கருப்புக்கொடி ஏற்றி கண்டனம்...

கோவை: மின் கட்டண உயர்வை குறைக்காத காரணத்தினால் 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழில் கூடங்கள் கருப்புக்கொடி ஏற்றி தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் தொழில் அமைப்புகளுக்கு உயர்த்தப்பட்ட மின் கட்டண உயர்வை குறைக்க வேண்டியும்,

*4.30 சதவிகிதம் உயர்த்திய நிலை கட்டணத்தை திரும்ப பெற வேண்டியும்,
*பரபரப்பு நேர கட்டணத்தை திரும்பப் பெறவும்
*சோலார் மேற்கூரை நெட்வொர்க் மின் கட்டணத்தை திரும்ப பெற கோரியும்

தமிழக முழுவதும் சிறுகுரு நடுத்தர தொழில் நிறுவனங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பு சார்பாக தங்களது கோரிக்கையை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று கடந்த சில மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதன் தொடர்ச்சியாக இன்று கோவையில் 50000  சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலைகளில் கருப்பு கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு மின்சார துறை தொழில் நிறுவனங்களுக்கு உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணங்களை குறைக்க வேண்டிய திரும்ப பெற வேண்டியும் பல்வேறு கட்ட போராட்டங்களை தமிழகம் முழுவதும் நடத்தி வந்தனர் கடந்த மாதம் காரணம்பேட்டையில் உண்ணாவிரத போராட்டமும் முதலமைச்சருக்கு கவனத்திற்கு செல்வதற்காக ஸ்பீட் போஸ்ட் அனுப்பும் போராட்டமும் செய்தனர் ஆனாலும் மின்சாரத் துறையில் இருந்து எவ்விதமான பதிலும் திரும்ப வராததால் இன்று கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புகள் சார்பில் தங்களது தொழில் நிறுவனத்தில் கருப்பு கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர் இதுகுறித்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக தங்களது கோரிக்கை மனுவை நேரடியாக மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe