சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள்...

published 1 year ago

சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகள்...

கோவை: சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பள்ளி மாணவிகள் பங்கேற்றனர்.

சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் அரசு சார்பில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கையெழுத்து இயக்கம் மற்றும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. "பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்" என்பதை வலியுறுத்தி உறுதிமொழி எடுக்கப்பட்டது. மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் உறுதி வாசிக்க பள்ளி மாணவிகள் மற்றும் சமூக நலத்துறை பெண் அலுவலர்கள் உறுதி மொழி எடுத்து கொண்டனர். அதனை தொடர்ந்து கையெழுத்து இயக்கத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்து, போட்டோ பாண்ட்டில் பள்ளி மாணவிகளுடன் இணைந்து புகைப்படம் எடுத்து கொண்டார்.

முன்னதாக நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட பள்ளி மாணவிகளுக்கு இளஞ்சிவப்பு வண்ண பேண்ட்(Band) யை கையில் கட்டிவிட்டு இனிப்புகள் மற்றும் பூங்கொத்தை வழங்கி சர்வதேச பெண் குழந்தைகள் தின வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe