தொழிலதிபரான லாட்டரி மார்ட்டின் தொடர்பான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை...

published 1 year ago

தொழிலதிபரான லாட்டரி மார்ட்டின் தொடர்பான இடங்களில்  வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை...

கோவை: கோவையில் பிரபல தொழிலதிபரான லாட்டரி மார்ட்டின் தொடர்பான இடங்களில்  வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். 

கோவை துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணர் பிரிவு பகுதியில் தொழிலதிபர் மார்ட்டின் வீடு உள்ளது.அதன் அருகில் மார்டின் ஹோமியோபதி மருத்து கல்லூரி மருத்துவமனை மற்றும் கார்ப்ரேட் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று மார்ட்டின் வீடு மற்றும் அலுவலகத்தில் காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

லாட்டரி விற்பனையில் விதிகளை மீறி 910" கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாகவும், சட்ட விரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாகவும் கேரள மாநிலம் கொச்சி அமலாக்கத்துறை மார்ட்டின் மீது வழக்குப்பதிவு செய்தது.

அதனை தொடர்ந்து மார்ட்டின் மீது வருமானவரித்துறை மற்றும் அமலாக்க துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை முன்னெடுத்துள்ளனர்‌.

இதன் அடிப்படையில்  வருமானவரித்துறை அதிகாரிகள் கடந்த ஏப்ரல் மாதம் சோதனை நடத்தினர். கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமலாக்கத்துறை சோதனை செய்த்ததில்  பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் அமலாக்கத்துறையால் முடக்கப்பட்ட நிலையில் தற்போது வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் தொழிலதிபர்  சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe