கோவையில் மசாஜ் சென்டரில் விபசாரம்; பெண் கைது

published 1 year ago

கோவையில் மசாஜ் சென்டரில் விபசாரம்; பெண் கைது

கோவை: கோவையில் ஓட்டல்கள், மசாஜ் சென்டர்களில் விபசாரம் நடத்துபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், அவிநாசி ரோடு பாரதி காலனியில் செயல்பட்டு வரும் ஒரு மசாஜ் சென்டரில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடைபெற்று வருவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், பீளமேடு போலீசார் அங்கு சென்று நேற்று சோதனை நடத்தினர்.

அதில், மசாஜ் என்ற பெயரில் பாலியல் தொழில் நடைபெற்று வந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் விபசாரம் நடத்திய தூத்துக்குடி மாவட்டம் கூடமலை சாமி கோயில் தெருவை சேர்ந்த சக்திகுமார் என்பவரின் மனைவி செண்பக சூர்யா(31) என்பவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள பிஜூ என்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe