காளப்பட்டி அருகே கார் டிரைவரை மீது தாக்குதல்

published 1 year ago

காளப்பட்டி அருகே கார் டிரைவரை மீது தாக்குதல்

கோவை: கோவையில் கார் டிரைவரை தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை காளப்பட்டி அருகே உள்ள ரத்தினம் நகரை சேர்ந்தவர் அஜய் (35), கார் டிரைவர். இவர் நேற்று முன்தினம் டைடல் பார்க் ரோட்டில் காரை நிறுத்திவிட்டு நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த ஒருவர் அஜயிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்தார்.

வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த அந்த நபர் தகாத வார்த்தைகளால் பேசி அஜயை அடித்து உதைத்தார். இது குறித்து அஜய் பீளமேடு போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இதில், அஜயை தாக்கியது நீலாம்பூர் வடக்கு குமரன் நகரை சேர்ந்த சாமிநாதன் (52) என்பதும், இவர் மீது பீளமேடு காவல் நிலையத்தில் அடிதடி, கொலை மிரட்டல் வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.

அந்த வழக்கில் அஜய் சாட்சியாக சேர்க்கப்பட்டிருந்தார். இதனால் ஏற்பட்ட முன்விரோதத்தில் இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சாமிநாதனை கைது செய்து, பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe