தடாகம் அருகே கஞ்சா பதுக்கி விற்ற 4 பேர் கைது : 5 கிலோ பறிமுதல்…

published 1 year ago

தடாகம் அருகே கஞ்சா பதுக்கி விற்ற 4 பேர் கைது : 5 கிலோ பறிமுதல்…

கோவை: கோவை பெரிய தடாகம் அருகே உள்ள செங்கல் சூலையில் சிலர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து தடாகம் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் தாமோதரன் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.

சோதனையில் அங்கு கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்த திருப்பூர் பாரதி புரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி மீனாட்சி சுந்தரேஸ்வரன் (வயது 19), சந்தோஷ் கண்ணன் (19), சரத்குமார் (20), பெரிய நாயக்கன் பாளையத்தை சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் (19) ஆகிய 4 பேரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட 4 பேரையும் போலீசார் கோர்டில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe