பஸ்சில் பெண்ணிடம் ரூ. 12 ஆயிரம் திருட்டு…

published 1 year ago

பஸ்சில் பெண்ணிடம் ரூ. 12 ஆயிரம் திருட்டு…

கோவை: கோவை குமிட்டிபதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி பாரதி(40). இவர் நேற்று முன்தினம் பஸ்சில் குனியமுத்தூர் வந்தார். பின்னர் அங்குள்ள ஒரு கடைக்கு பேக் வாங்குவதற்காக சென்றார். ஆனால் அந்த கடை பூட்டப்பட்டிருந்தது. 

இதனால் பாரதி வேறு ஒரு கடைக்கு செல்வதற்காக மீண்டும் பஸ்சில் ஏறி பிகே புதூர் சென்றார். அப்போது பஸ்சில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி யாரோ அவரது கைப்பையில் வைத்திருந்த ரூ. 12 ஆயிரத்தை திருடி சென்று விட்டனர். இதனையறிந்து அதிர்ச்சியடைந்த பாரதி குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் திருடிய நபரை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe