செல்வபுரத்தில் வீடு புகுந்து 27 பவுன் நகை கொள்ளை...

published 1 year ago

செல்வபுரத்தில் வீடு புகுந்து 27 பவுன் நகை கொள்ளை...

கோவை: செல்வபுரத்தில் வீடு புகுந்து 27 பவுன் நகையை கொள்ளையடித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை செல்வபுரம் தெலுங்குபாளையத்தை சேர்ந்தவர் தங்கவேல். இவரது மனைவி ஸ்வேதா அம்பிகை (22). இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றார். மறுநாள் காலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டுக்குள் இருந்த அலமாரி திறந்து கிடந்தது. அதில் வைத்திருந்த 27 பவுன் தங்க நகை காணாமல் போனது தெரிய வந்தது. வீட்டுக்குள் நைசாக புகுந்த மர்ம நபர்கள் அலமாரி அருகே ஒரு டப்பாவில் வைத்திருந்த சாவியை எடுத்து அலமாரியை திறந்து நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். 

இதனால், அதிர்ச்சியடைந்த ஸ்வேதா அம்பிகை செல்வபுரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். விசாரணையில், ஸ்வேதா அம்பிகை அலமாரி சாவி வைக்கும் இடத்தை அவருக்கு தெரிந்த நபர் யாரோதான் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என கருதுகின்றனர். அதன்பேரில், போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe