வடவள்ளியில் வீட்டிற்குள் புகுந்து பணம், நகை திருட்டு..

published 1 year ago

வடவள்ளியில் வீட்டிற்குள் புகுந்து பணம், நகை திருட்டு..

கோவை: கோவை வடவள்ளி தொண்டாமுத்தூர் ரோட்டை சேர்ந்தவர் நிர்மலா(50). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு அவர் வேலைக்கு சென்று விட்டார். 

அப்போது அவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர் அங்கிருந்த அரை பவுன் தங்கம் மற்றும் ரூ. 50 ஆயிரத்தை திருடி சென்று விட்டார். இதனையடுத்து கதவு திறந்து கிடப்பதை பார்த்த பக்கத்து வீட்டை சேர்ந்த பெண் ஒருவர் நிர்மலாவுக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார். உடனே வீட்டுக்கு விரைந்து வந்த நிர்மலா நகை, பணம் திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். 

அவர் இது குறித்து வடவள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர்.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe