கோவையில் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியால் பரபரப்பு…

published 1 year ago

கோவையில் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியால் பரபரப்பு…

கோவை: கோவை கிருஷ்ணம்பதி குளத்தில் தற்கொலைக்கு முயன்ற மூதாட்டியால் இன்று காலை பரபரப்பு ஏற்பட்டது. தீயணைப்பு துறையினர் அந்த மூதாட்டியை பத்திரமாக மீட்டனர்.

கோவை வீரகேரளம் அருகே உள்ள கிருஷ்ணம்பதி குளத்தில் இன்று காலை மூதாட்டி ஒருவர் திடீரென குதித்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் உடனே கவுண்டம்பாளையம் தீயணைப்புத்துறை அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தனர்.

உடனே சம்பவ இடத்துக்கு நிலைய அலுவலர் சுரேஷ்குமார், முன்னணி தீயணைப்பு துறை அலுவலர் ராமச்சந்திரன் உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். சுமார் 1/2 மணி நேரம் போராடி தீயணைப்பு துறையினர் குளத்தின் நடுப்பகுதியில் தத்தளித்த மூதாட்டியை பத்திரமாக மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.

விசாரணையில் அவர் ஆர்.எஸ் புரத்தை சேர்ந்த முத்துலட்சுமி (65) என்பதும், அவர் குடும்ப பிரச்சினையால் மனநலம் பாதிக்கப்பட்டு தற்கொலைக்கு முயன்றதாக தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து தீயணைப்பு துறையினர் மூதாட்டியை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மூதாட்டி ஒருவர் குளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe