குடிபோதையில் நிலைதடுமாறி கீழே விழுந்தவர் உயிரிழப்பு- போலிசார் விசாரணை...

published 1 year ago

குடிபோதையில் நிலைதடுமாறி கீழே விழுந்தவர் உயிரிழப்பு- போலிசார் விசாரணை...

கோவை: இருகூர் அத்தப்பகவுண்டன் புதூரை சேர்ந்தவர் அருண்(30). கூலி தொழிலாளி. குடிபோதை பழக்கமுடைய இவர் கடந்த 25ம் தேதி சின்னியம்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் கடை அருகே குடிபோதையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பின்னந்தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. 

அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது குறித்து பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe