தொழிலில் நஷ்டம்- உயிரை மாய்த்து கொண்ட மளிகை கடைக்காரர்...

published 1 year ago

தொழிலில் நஷ்டம்- உயிரை மாய்த்து கொண்ட மளிகை கடைக்காரர்...

கோவை: தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் சொக்கம்பலம். இவரது மகன் தினகரன்(49). இவர் கோவை ஜிஎன் மில்ஸ் அன்னை கார்டன் பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். ஆனால் அவருக்கு எதிர்பார்த்த அளவு வருமானம் இல்லாமல் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த சில நாட்களாக அவர் கடும் மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில், கடந்த 22ம் தேதி தினகரன் தனது தந்தையிடம் செல்போனில் பேசினார். அதன்பின்பு அவர் பேசவில்லை. செல்போன் அழைப்பையும் ஏற்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த சொக்கம்பலம் நேற்று முன்தினம் கோவை வந்து மகன் வீட்டுக்கு சென்று பார்த்தார். அப்போது அவர் வீட்டுக்குள் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தார். 

அவரது அருகில் விஷ பாட்டில் ஒன்றும் கிடந்துள்ளது. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த சொக்கம்பழம் துடியலூர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் இறந்து 3 நாட்களுக்கு மேல் இருக்கும் என்று தெரிகிறது. இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe