கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம்- கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி...

published 1 year ago

கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம்- கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி...

கோவை: கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் அப்பநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் கலைஞரின் வரும் முன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதனை கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் தொடங்கி வைத்து மருத்துவ முகாமை பார்வையிட்டார்.

மேலும் இங்கு கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கர்ப்பிணி பெண்களுக்கு பூ, வளையல், பொட்டு உள்ளிட்டவற்றை வழங்கினார். இந்த மருத்துவ முகாமில் கர்ப்பிணி பெண்களும் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டனர்.

இந்நிகழ்வில் வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல், துடியலூர் நகர் நலமய மருத்துவர் ரவி உட்பட கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe