வீடு புகுந்து வைர மோதிரம் திருட்டு…

published 1 year ago

வீடு புகுந்து வைர மோதிரம் திருட்டு…

கோவை: கோவை கணபதி சதுர்வேதி நகரை சேர்ந்தவர் ஸ்ரீ ஹரி (27), டிசைனர். இவர் அடிக்கடி பெங்களூர் சென்று வருவது வழக்கம். இதேபோல், ஸ்ரீ ஹரி கடந்த 26ம் தேதி வீட்டை பூட்டி விட்டு பெங்களூர் சென்றார். 

பின்னர் அங்கிருந்து நேற்று கோவை திரும்பினார். வீட்டுக்கு சென்று பார்த்தபோது, வீட்டு கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே அலமாரியில் வைத்திருந்த 5 கிராம் எடையிலான வைர மோதிரம், விலை உயர்ந்த வாட்சுகள் திருடு போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் இது குறித்து சரவணம்பட்டி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். மேலும் அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி திருட்டில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe