கேரளத்தில் குண்டு வெடிப்பு... கோவையில் 2வது நாளாக தீவிர சோதனை

published 1 year ago

கேரளத்தில் குண்டு வெடிப்பு... கோவையில் 2வது நாளாக தீவிர சோதனை

கோவை: கேரளா மாநிலம் எர்ணாகுளம் களமச்சேரியில் கிறிஸ்துவ மாநாடு, வழிபாடு நேற்று நடந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென டிபன் பாக்ஸ் வெடி குண்டு வெடித்தது. இதில் பெண் ஒருவர் பலியானார்.

சிலர் படுகாயமடைந்தனர். மக்கள் கூட்டம் மிகுந்த இடத்தில் வெடிகுண்டு வெடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சர்ச் வளாகத்தில் குண்டு வெடித்த சம்பவத்தை தொடர்ந்து கோவையில் உஷார் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. கோவையில் உள்ள அனைத்து சர்ச்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

குறிப்பாக நகரில் போலீசார் பல இடங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாநகர், மாவட்டங்களில் சுமார் ஆயிரம் போலீசார் கண்காணிப்பு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மசூதிகள், கோயில்களிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை ரயில் நிலையங்களின் அனைத்து பிளாட்பாரங்களிலும் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். பார்சல் மற்றும் வளாக பகுதியில் தீவிர சோதனை நடத்தப்பட்டது. நேற்று மதியம் துவங்கிய இந்த சோதனை இன்றும் 2 வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தவிர மாவட்ட எல்லை சோதனை சாவடிகளில் தீவிர வாகன சோதனை நடக்கிறது. உடைமைகள் சோதனை செய்யப்பட்ட பிறகே கோவைக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe