துணிக்கடையில் ரூ.23 ஆயிரம் திருட்டு…

published 1 year ago

துணிக்கடையில் ரூ.23 ஆயிரம் திருட்டு…

கோவை: கோவை கணபதி விஜி ராவ் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார்(58). இவரது மனைவி சத்தி மெயின் ரோட்டில் உள்ள மருத்துவமனை அருகே துணிக்கடை நடத்தி வருகிறார். 

நேற்று முன்தினம் வழக்கம்போல் வியாபாரத்தை முடித்து கொண்டு கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றனர். மறுநாள் கடையை திறக்க வந்த போது, ஷட்டர் பூட்டு உடைக்கபட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது கல்லாவில் இருந்த ரூ. 23 ஆயிரம் மற்றும் 2 ஆயிரம் மதிப்பிலான துணிகள் திருடு போனது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து ராஜ்குமார் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 

புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் கடையில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து திருட்டில் ஈடுபட்ட நபரை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe