புதிதாக திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி மாமன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்...

published 1 year ago

புதிதாக திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி மாமன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்...

கோவை: புதிதாக திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி மாமன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

கோவை மாநகராட்சி 41வது வார்டு பி.என்.புதூர் பகுதியில் புதிதாக திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் மதுபான கடையை அகற்ற வலியுறுத்தி அந்த வார்டு மாநகராட்சி கவுன்சிலர் சாந்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

இது குறித்து அவர் அளித்துள்ள மனுவில், இது சம்பந்தமாக கடந்த ஆகஸ்ட் மாதமே மதுபான கடைக்கு அனுமதி அளிக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து முறையிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் அப்பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் இருப்பதாகவும் அங்கு ஒரு மயானமும் இருப்பதால் பல்வேறு இடையூறுகள் ஏற்படும் எனவும் சட்டவிரோத செயல்கள் அதிகரிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ள அவர் உடனடியாக அந்த டாஸ்மார்க் மதுபான கடையை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe