கோவையில் பேருந்தில் பயணித்த பெண்ணிடம் நகை திருட்டு…

published 1 year ago

கோவையில் பேருந்தில் பயணித்த பெண்ணிடம் நகை திருட்டு…

கோவை: கோவை ராமநாதபுரம் பாலாஜி நகரை சேர்ந்தவர் சாந்தி(53). இவர் கட்டுமான நிறுவனம் ஒன்றில் கிளார்க்காக வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று சாந்தி பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர் அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்க செயினை நைசாக திருடி தப்பி சென்று விட்டனர்.

இதனையடுத்து சவுரிபாளையம் பிரிவு பஸ் நிறுத்தத்தில் இறங்கிய சாந்தி தனது நகை திருடு போனது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் ராமநாதபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe