கோவை, ஈரோடு மாநகராட்சியில் 6 பேர் உதவி கமிஷனர்களாக பதவிஉயர்வு…

published 1 year ago

கோவை, ஈரோடு மாநகராட்சியில் 6 பேர் உதவி கமிஷனர்களாக பதவிஉயர்வு…

கோவை: சென்னை நகராட்சி நிர்வாக  இயக்குனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழகத்தில் 18 பேர் மாநகராட்சி உதவி கமிஷனர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அதில் கோவை மாநகராட்சியில், பல்வேறு பொறுப்புகளில் இருந்த 4  பேர் மாநகராட்சி உதவி கமிஷனர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். 

அதன் விவரம்:-
கோவை மாநகராட்சியில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்த கணேஷ் குமார், பதவி உயர்வு பெற்று சேலம் மாநகராட்சி உதவி கமிஷனராக (தனி) நியமிக்கப்பட்டுள்ளார். கணக்கு அதிகாரியாக பணியாற்றி வந்த தமிழ் வேந்தன் சேலம் மாநகராட்சி உதவி கமிஷனராக(அக்கவுண்ட்ஸ்) நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் கோவை மாநகராட்சியில் கணக்கு அதிகாரியாக இருந்த கனகராஜ் திருப்பூர் மாநகராட்சி உதவி கமிஷனராக (தனி), நியமிக்கப்பட்டுள்ளார். நிர்வாக அதிகாரியாக பணியாற்றிய உஷாராணி பதவு உயர்வு பெற்று கோவை மாநகராட்சி உதவி கமிஷனராக (தனி) நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஈரோடு மாநகராட்சியில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்த ஹேமலதா பதவி உயர்வு பெற்று கரூர் மாநகராட்சி உதவி கமிஷனராக (வருவாய் /தனி) நியமிக்கப்பட்டுள்ளார். ஈரோடு மாநகராட்சி கணக்கு அதிகாரி குமரேசன், ஓசூர் மாநகராட்சி உதவி கமிஷனராக ( வருவாய் /தனி) பதவி உயர்வு பெற்றுள்ளார். 
இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe