பஸ்சில் வாலிபரிடம் பணத்தை திருட முயன்றவரை பிடித்த பொதுமக்கள்…

published 1 year ago

பஸ்சில் வாலிபரிடம் பணத்தை திருட முயன்றவரை பிடித்த பொதுமக்கள்…

கோவை: உக்கடம் பூமாரி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் வினோத்(36). இவர் நேற்று டவுண் பஸ்சில் காந்திபுரத்தில் இருந்து உக்கடம் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது பின்னால் நின்றிருந்த வாலிபர் ஒருவர் நைசாக வினோத் சட்டை பாக்கெட்டில் இருந்த ரூ. 500 ஐ திருடினார். 

உடனே சுதாரித்த அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த நபரை பிடித்து உக்கடம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், பணம் திருடியது புல்லுக்காடு ஹவுசிங் யூனிட்டை சேர்ந்த பாலகிருஷ்ணன்(32) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe