கோவையில் துணிக்கடையில் திருட்டு…

published 1 year ago

கோவையில் துணிக்கடையில் திருட்டு…

கோவை: கோவை கரும்புக்கடை சவுகார் நகரை சேர்ந்தவர் அப்துல் முத்தலீப்(34). இவர் அவிநாசி ரோடு பாப்பநாயக்கன்பாளையத்தில் துணிக்கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை ஊழியர் ஒருவர் கடையை திறக்க சென்றார். 

அப்போது கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உடனே அவர் அப்துல் முத்தலீப்பை செல்போனில் தொடர்பு கொண்டு தெரிவித்தார். அவர் அங்கு சென்று பார்த்த போது கடையில் இருந்த ரூ. 1000 மற்றும் பேண்ட், சர்ட் ஆகியவை திருடு போயிருப்பது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ. 7 ஆயிரம் ஆகும். நள்ளிரவில் உள்ளே நுழைந்த மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளார். இது குறித்து அப்துல் முத்தலீப் ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe