ஒன்றிய அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மாஜி தபால் துறை அதிகாரியிடம் ரூ. 12.30 லட்சம் மோசடி...

published 1 year ago

ஒன்றிய அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மாஜி தபால் துறை அதிகாரியிடம் ரூ. 12.30 லட்சம் மோசடி...

கோவை: கோவையில் மகனுக்கு ஒன்றிய அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மாஜி தபால் துறை அதிகாரியிடம் ரூ. 12.30 லட்சம் மோசடி செய்ததாக ஒருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
 

கோவை இருகூர் என்ஜிஆர் பிரிவை சேர்ந்தவர் துரைசாமி(64). தபால் துறையில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது மகனுக்கு ஒன்றிய அரசு வேலை வாங்கி தர முயற்சி செய்து வந்தார். அப்போது கோவையை சேர்ந்த சூர்யதேவ் பிரகாஷ்(40) என்பவர் அறிமுகமானார். அப்போது அவர் தான் வக்கீல் எனவும், ஒன்றிய அரசு துறையில் பலருக்கு வேலை வாங்கி கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் சிலருக்கு பணம் கொடுத்தால்தான் அந்த பணி கிடைக்கும் என கூறி பணம் கேட்டுள்ளார். இதனை நம்பிய துரைசாமி அந்த நபரின் வங்கி கணக்கில் பல்வேறு கட்டங்களாக ரூ. 12.30 லட்சம் அனுப்பி உள்ளார். ஆனால் அதன்பின்பு அவர் சொன்னபடி துரைசாமி மகனுக்கு அரசு வேலை பெற்று தரவில்லை. பணத்தை திருப்பி கேட்டபோது பணம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். மேலும் செல்போனில் அழைத்தால் அழைப்பை நிராகரித்துள்ளார். 

இதனால் ஏமாற்றமடைந்த துரைசாமி இது குறித்து சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் நம்பிக்கை மோசடி பிரிவின் கீழ் சூர்யதேவ் பிரகாஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe