பணி மாற்றம் செய்வதால் தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகம் வளாகத்தில் தர்ணா...

published 1 year ago

பணி மாற்றம் செய்வதால் தூய்மை பணியாளர்கள் மாநகராட்சி அலுவலகம் வளாகத்தில் தர்ணா...

கோவை: கோவை மாநகராட்சியில் பணிபுரிந்து வரும்  நிரந்தர தூய்மை பணியாளர்கள் பத்தாண்டுகளுக்கு மேலாக தாங்கள் செய்து வரும் பணிகளை தவிர்த்து வேறு பணிகளை செய்ய அதிகாரிகள் சொல்வதாக கூறி உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். 100 க்கும் மேற்பட்டோர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் இது குறித்து அவர்கள் கூறுகையில்,  
குப்பைகளை பிரித்தெடுக்கும் தொழில் செய்து வந்த தங்களை சாக்கடை மலம் அள்ளும் தொழிலுக்கும் தற்போது பணி அமர்த்துவதாக தெரிவிக்கின்றனர்.

மேலும் சாலை நடுவே உள்ள தடுப்புகளில்  ஆபத்தான முறையில் மண்ணை அகற்றும் பணியில் ஈடுபடுத்துவதாகவும் 
ஓய்வு பெறும் வயதில் உள்ள தங்களை வேறு பணிகளுக்கு பணி அமர்த்துவதாக  தெரிவித்தனர்.
இது குறித்து மாநகராட்சி ஆணையரை நேரில் சந்தித்து தங்கள் குறைகளை முன்வைக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe