மத்திய சிறை முன்பு 1 கிலோ கஞ்சா பறிமுதல்...

published 1 year ago

மத்திய சிறை முன்பு 1 கிலோ கஞ்சா பறிமுதல்...

கோவை: கோவை மத்திய சிறை முன்பு 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் வாலிபர் ஒருவரை கைது செய்தனர்.
 

கோவை மத்திய சிறையில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சிறைக்குள் தடைசெய்யப்பட்ட செல்போன், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன்படுத்துகிறார்களா? அன அடிக்கடி போலீசார் ஆய்வு செய்வது வழக்கம். இந்நிலையில், நேற்று சிறையின் நுழைவு வாயில் அருகே வாலிபர் ஒருவர் சந்தேகம்படும் படி நின்றிருந்தார். இதனை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். அவர் வைத்திருந்த பையை சோதனை செய்த போது அதில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. 

இது குறித்து மத்திய சிறை ஜெயிலர் சிவராஜன் ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கஞ்சா வைத்திருந்த தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டி பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி கிரி(19) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர். அவர் கைதிகளுக்கு கஞ்சா சப்ளை செய்ய வந்தாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர். பின்னர் கைது செய்யப்பட்ட அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மத்திய சிறை முன்பு கஞ்சாவுடன் வாலிபர் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை வடகோவை ரயில்வே பாலம் அருகே சிலர் கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சாயிபாபா காலனி போலீசார் நேற்று அங்கு சென்று சோதனை செய்தனர். அங்கிருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரித்தனர். அதில், அந்த வாலிபர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கஞ்சா விற்ற கள்ளக்குறிச்சியை சேர்ந்த வினோத்குமார்(23) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe