கல்லூரி மாணவரிடம் லேப்டாப் திருட்டு…

published 1 year ago

கல்லூரி மாணவரிடம் லேப்டாப் திருட்டு…

கோவை: மானா மதுரை கிருஷ்ணராஜ புரத்தை சேர்ந்தவர் பொழிலன்(20). இவர் சரவணம்பட்டி துடியலூர் ரோடு சிவசக்தி நகரில் நண்பர்களுடன் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி தனியார் கல்லூரியில் படித்து வருகின்றார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பொழிலன் வீட்டு கதவை பூட்டாமல் தூங்கினார். 

மறுநாள் காலையில் எழுந்து பார்த்த போது அவரது லேப்டாப்பை காணவில்லை. நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் திருடி சென்று விட்டார். இது குறித்து பொழிலன் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து லேப்டாப் திருடிய நபரை தேடி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe