அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு…

published 1 year ago

அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு…

கோவை: கோவை வாலாங்குளம் ரயில்வே குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு மரத்தில் அருகே ஆண் ஒருவர் அழுகிய நிலையில் சடலமாக கிடந்தார். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். 

போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அவரின் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் இறந்து 3 நாட்களுக்கு மேல் இருக்கும் என்றும், அவரது உடலில் காயங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. சுமார் 45 வயது மதிக்கத்தக்க அவர் யார்? எந்த ஊர் என்பன போன்ற விவரம் தெரியவரவில்லை. இது குறித்து சந்தேக மரணம் என ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe