வாடகை வீட்டை காலி செய்யும் போது உரிமையாளரின் பொருளையும் எடுத்து சென்ற நபர்கள்...

published 1 year ago

வாடகை வீட்டை காலி செய்யும் போது உரிமையாளரின் பொருளையும் எடுத்து சென்ற நபர்கள்...

கோவை: கோவை கவுண்டம்பாளையம் பிரிவு பிரஸ் காலனியை சேர்ந்தவர் முருகேசன்(62). இவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்த குடும்பத்தினர் சில நாட்களுக்கு முன்பு வீட்டை காலி செய்து வேறு வீட்டுக்கு சென்றனர். அவர்கள் காலி செய்த போது, அவர்களது பொருட்களை மட்டும் எடுத்து செல்லாமல், முருகேசனின் 300 லிட்டர் சின்டெக்ஸ் டேங்க்கையும் ஆட்டோவில் ஏற்றி கொண்டு சென்றனர். 

இதனையறிந்து அதிர்ச்சியடைந்த முருகேசன் இது குறித்து கவுண்டம்பாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் சின்டெக்ஸ் டேங்கை திருடி சென்ற 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe