சாயிபாபா காலனியில் அலுவலக பூட்டை உடைத்து திருட்டு

published 1 year ago

சாயிபாபா காலனியில் அலுவலக பூட்டை உடைத்து திருட்டு

கோவை: கோவையில் அலுவலக பூட்டை உடைத்து ரூ. 40 ஆயிரம் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை கே.கே.புதூர் சாயிபாபா காலனியில் தனியார் நிறுவன அலுவலகம் உள்ளது. இங்கு கிணத்துக்கடவு அண்ணாநகரை சேர்ந்த நிரஞ்சன்(24) மேலாளராக உள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு அலுவலக பணிகளை முடித்து கொண்டு கதவை பூட்டி விட்டு சாவியை உரிமையாளர் வீட்டில் கொடுத்து விட்டு சென்றார்.

நேற்று காலையில் ஊழியர் லோகேஷ் என்பவர் அலுவலகத்தை திறக்க சென்றார். அப்போது அலுவலகத்தின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உடனே அவர் மேலாளர் நிரஞ்சனுக்கு தகவல் கொடுத்தார். அவர் சென்று பார்த்த போது அங்கு கல்லாவில் இருந்த 40 ஆயிரம் பணத்தை மர்ம நபர் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த நிரஞ்சன் இது குறித்து சாயிபாபா காலனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர். அப்போது கதவில் பதிவாகியிருந்த ஒரு கைரேகை பதிவை போலீசார் கைப்பற்றினர். மேலும் அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe