கைப்பையை வாகனத்தில் மாட்டிவிட்டு சென்ற பெண்- திருடி சென்ற நபர்கள்...

published 1 year ago

கைப்பையை வாகனத்தில் மாட்டிவிட்டு சென்ற பெண்- திருடி சென்ற நபர்கள்...

கோவை: கோவை சின்னவேடம்பட்டி லட்சுமி புரத்தை சேர்ந்தவர் சங்கீதா(25). இவர் சம்பவத்தன்று டூ-வீலரில் கோவை வந்தார். வைசியாள் தெருவில் டூ-வீலரை நிறுத்தி விட்டு பொருட்கள் வாங்க அங்குள்ள கடைக்கு சென்றார். அப்போது அவர் தனது கைப்பையை டூ-வீலரில் மாட்டி விட்டு சென்றுள்ளார். அவர் சிறிது நேரம் கழித்து திரும்பி வந்த போது அவரது கைப்பையை காணவில்லை. மர்ம நபர் திருடி சென்று விட்டார். அதில், அவரது செல்போன், ஏடிஎம் கார்டுகள், ஸ்மார்ட் வாட்ச் இருந்தது. 

இதனால் அதிர்ச்சியடைந்த சங்கீதா கடைவீதி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். மேலும் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில், கைப்பையை திருடி சென்றது திருச்சி சூரியூரை சேர்ந்த வெல்டிங் தொழிலாளி கோபால கிருஷ்ணன்(33) என்பது தெரியவந்தது. அவரை பிடித்து விசாரணை செய்த போது, சங்கீதா புதிய ஏடிஎம் கார்டை பயன்படுத்தாமல் இருந்துள்ளார். அதனை பயன்படுத்தி ரூ. 16,660 ஐ கோபாலகிருஷ்ணன் எடுத்ததும், அதில் ரூ. 2660 ஐ செலவு செய்ததும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் கோபால கிருஷ்ணனை கைது செய்தனர். அவரிடம் இருந்து செல்போன் மற்றும் ரூ. 14 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe