பைக் சக்கரத்தில் துப்பட்டா சிக்கி மகன் கண் முன்னே தாய் பரிதாபமாக பலி...

published 1 year ago

பைக் சக்கரத்தில் துப்பட்டா சிக்கி மகன் கண் முன்னே தாய் பரிதாபமாக பலி...

கோவை: கோவையில் பைக் சக்கரத்தில் துப்பட்டா சிக்கி மகன் கண் முன்னே தாய் பரிதாபமாக பலியானார்.
கோவை ராமநாதபுரம் கணேசபுரம் சடையப்பன் தெருவை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மனைவி சாந்தகுமாரி(51). இவர் சம்பவத்தன்று தனது மகன் ராகுலுடன்(25) பைக்கில் சென்று கொண்டிருந்தார். 

அவர்கள் திருச்சி ரோடு சிங்காநல்லூரில் உள்ள கல்யாண மண்டபம் அருகே சென்ற போது சாந்தகுமாரி அணிந்திருந்த துப்பட்டா பைக்கின் பின் சக்கரத்தில் சிக்கியது. இதில் பைக் நிலைதடுமாறி இருவரும் தூக்கி வீசப்பட்டனர். கீழே விழுந்ததில் சாந்தகுமாரிக்கு தலை, கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. ராகுல் அதிர்ஷ்டவசமாக காயத்துடன் உயிர் பிழைத்தார். உயிருக்கு போராடிய சாந்தகுமாரியை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்பாக கோவை கிழக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மகன் கண் முன்னே பெண் விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe