செல்வ சிந்தாமணி குளத்தின் கொள்ளளவை குறைக்க ஆட்சியர் அறிவுறுத்தல் - தகவல்…

published 1 year ago

செல்வ சிந்தாமணி குளத்தின் கொள்ளளவை குறைக்க ஆட்சியர் அறிவுறுத்தல் - தகவல்…

கோவை: இன்று மாலைக்கு மேல் கோவை மாவட்டத்தில் 
கனமழை இருக்கும் என
வானிலை ஆய்வாளர்களிடம் இருந்து தகவல் வந்ததை அடுத்து செல்வ சிந்தாமணி குளத்தின் கொள்ளளவை குறைக்க வேண்டும் என கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் செல்வ சிந்தாமணி குளத்தின் கொள்ளளவு குறைக்க அறிவுறுத்தி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிருஷ்ணாம்பதி, செல்வம்பதி, குமாரசாமி, செல்வ சிந்தாமணி, ஆகிய குளங்கள் 100% நிரம்பி உள்ளது. எனவே 
உபரி நீர் அனைத்தும் செல்வ சிந்தாமணி குளத்தின் வழியாக உக்கடம் குளத்திற்கு சென்று சேர உள்ளது.

செல்வ சிந்தாமணி முதல் உக்கடம் செல்லும் வாய்க்காலின் கொள்ளளவு குறைவாக உள்ளதால்
செல்வ சிந்தாமணி குளத்தின் கொள்ளளவை மழைக்கு முன்பு சற்று குறைத்து வைத்தால்
மழை நேரத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை கொஞ்சம் தவிர்க்கலாம் என கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு கூறியுள்ளது.

இந்நிலையில் ஆட்சியரின் அறிவுறுத்தலுக்கு பிறகு செல்வ சிந்தாமணி குளத்தின் கொள்ளளவு குறைக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe