கல்யாண சமையலில் தகராறு- ஒருவருக்கு பலத்த காயம்...

published 1 year ago

கல்யாண சமையலில் தகராறு- ஒருவருக்கு பலத்த காயம்...

கோவை: கோவை சித்தாபுதூர் நந்தகோபால் தெருவை சேர்ந்தவர் கோவிந்த ராஜ்(47). இவர் காந்திபுரம் பகுதியில் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வருகிறார். மேலும் கிடைக்கும் கூலி வேலைக்கும் சென்று வந்துள்ளார். 

இந்நிலையில், நேற்று முன் தினம் செல்வபுரத்தில் உள்ள ஒரு கல்யாணமண்டபத்திற்கு சமையல் வேலைக்கு சென்றார். அப்போது அவருடன் சமையல் வேலைக்கு வந்த ராமநாதபுரம் மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த தன்ராஜ்(53), என்பவருக்கும், கதிர்வேலுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்த தன்ராஜ் தகாத வார்த்தைகளால் பேசி கதிர்வேலை கத்தியால் குத்தினார். 

இதில் அவருக்கு தலை, நெற்றி உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து செல்வபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து தன்ராஜை கைது செய்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe